சனி, டிசம்பர் 24, 2011

காசே கர்மமாய் செயல்படும் கல்லூரிகள்.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....


சமீப காலமாய் தொலைக்காட்சி, இன்டர்நெட், செல்போன் மூலம் பரவும் ஆபாசத்தால் நிலை குலைந்து போயுள்ளனர் இளைஞர் சமுதாயம்.

பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை எப்பொழுது பள்ளிக் கூடத்திற்கு அனுப்புவோம், எப்பொழுது கல்லூரி திறப்பார்கள் என்று விடுமுறை நாட்களில் வயிற்றில் நெருப்பைக் கட்டி வைத்திருப்பது போல் இருப்பாப்பார்கள். கல்வியுடன் ஒழுக்கத்தையும் சேர்த்துக் கற்பிக்கும் கலாசாலை கல்லூரி என்பதால் கல்லூரி தான் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு என்று கல்லூரிக்கு பிள்ளைகளை அனுப்பியப் பின்னரே அப்பாடா என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள். அந்தக் காலம் மலை ஏறிப் போய் எப்பொழுது கல்லூரிப் படிப்பு முடியும் எப்பொழுது கல்லூரிக்கு முழுக்குப் போடுவார்கள் என்று ஏங்கும் காலம் இப்பொழுது உருவாகி விட்டது. அந்தளவுக்கு கல்வி பயிலும் கலாசாலைக்குள்ளும் ஆபாச கலாச்சாரம் தறிகெட்டுப் புகுந்து விட்டது. 
 
இதற்கெல்லாம் காரணம் காசே கர்மமாய் செயல்படும் கல்லூரி நிர்வாகம் என்றால் மகையாகாது கல்விப் பயில வரும் மாணவ, மாணவிகள் என்ன லட்சனத்தில் கல்வி பயிலுகின்றனர் என்பதை முறையாக கவனிப்பதில்லை. கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரிய, ஆசரியைகள் என்;ன லட்சனத்தில் மாணவ, மாணவிகளுக்கு கல்வி பயிற்றுவிக்கின்றனர் என்பதையும் கவனிப்பதில்லை. கல்லூரி முடிந்தப் பின் கல்லூரியைப் பராமரிக்கும் வாட்ச்மேன்கள், கேட் கீப்பர்கள் என்ன லட்சனத்தில் கல்லூரியைப் காதுகாக்கின்றனர் ஹாஸ்டலில் தங்கி இருக்கும் மாணவ, மாணவிகளை எவ்வாறு கண்காணிக்கின்றனர் என்பதையும் கவனிப்பதில்லை.

ஹாஸ்டல் வாசலில் ரூல்அன்ட்ரெகுலேஷன் ஏஃபோர் சைஸ் பேப்பரில் எழுதி ஒட்டப்பட்டு மட்டுமே இருக்கும் அது ஒரு ஏட்டுச் சுரைக்காய் என்பதை அறிந்த மாணவ, மாணவிகள் அதில் எழுதி தடுக்கப்பட்டுள்ளதை விட அதிகமாக ஹாஸ்டலில் அனுபவிக்கின்றனர்.

சமீபத்தில் கும்மிடிப் பூண்டி அருகே பாதிரிவேடு என்ற கிராமத்தில் இயங்கும் அரசு மேல்நிலைப் பள்ளி ஒன்றில் விடுமுறை விடப்பட்ட சனிக்கிழமை அன்று ப்ளஸ் டூ பயிலும் ஐந்து மாணவர்களும், ப்ளஸ் ஒன் பயிலும் இரண்டு மாணவிகளும் தங்களுடைய திட்டத்தை நிறைவேற்ற மேல்படி பள்ளியின் மொட்டை மாடியைப் பயன்படுத்தி இருக்கின்றனர் இது எவ்வளவு நாளாக நடந்து வருகிறது என்பது யாருக்கும் தெரிவில்லை. அன்று நடந்ததும் யாருக்கும் தெரிந்திருக்காது அன்றைய சம்பவம் மாணவர்களில் சிலர் தங்களுடைய செல்போனில் பதிந்து அதை புளூடூத் மூலம் பரவச் செய்ததால் சம்பவம் வெளியே கசிந்து ஐந்து மாணவர்களுக்கு கல்லூரி நிர்வாகம் டிசி கொடுத்து அனுப்பப்பட்டிருக்கிறது.

இதை அறிந்த பொதுமக்கள் இதற்கு காரணமான அந்த இரண்டு மாணவிகளையும் வெளியேற்ற வேண்டும் என்றும் பள்ளியைப் பராமரிக்க வாடச்மேன் இட வேண்டும் என்றுக் கூறி கல்லூரி முன் குழுமி கோஷம் எழுப்பி இருக்கின்றனர். இதை அறிந்ததும் சினிமா க்ளைமாக்ஸில் போலீஸ் வருவது போல் அந்த ஊர் ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி ராமச்சந்திரன் விரைந்து வந்து கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்களித்து மக்களை கலைந்து செல்ல வலியுருத்தி உள்ளார் (அதற்கு முன் மேல்படி கல்லூரி இந்த லட்சனத்தில் இருப்பது தெரியாது போலும்(?).
 
சுமார் பதினைந்து கிராமங்களிலிருந்து இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயிலும் இந்தக் கல்லூரி விடுமுறை நாட்களில் திறந்தே கிடக்கிறது என்றால் இதில் வேறு எதோ மரமம் புதைந்திருப்பதாகத் தோன்றுகிறது.    

எது எப்படியோ இனிமேல் பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் விடுமுறை நாட்களில் கோச்சிங் கிலாஸ் இருக்கிறது என்றோ இன்னும் வேறுப் பலக் காரணங்களைக் கூறியோ பள்ளிக்கு செல்வதாகக் கூறினால் கண்டிப்பாகப் பின் தொடருங்கள் கல்லூரி முடிந்து தாமதமாக வந்தாலும் கவனியுகங்கள்.

வெளி ஊரில் தங்கிப் பயிலும் பிள்ளைகளை வார விடுமுறை இரண்டு நாட்களில் ஊருக்கு வரச்சொல்லி உத்தரவிடுங்கள் வாரத்தில் அல்லது மாதத்தில் ஒரு முறையாவது சென்று சூற்றுச் சூழலைக் கவனியுங்கள். கவனிக்கத் தவறினால் கற்பிழப்பது முதல் கஞ்சா, அபின் பழக்கம் வரை தொற்றிக் கொண்டால் அவைகளிலிருந்து மீட்பது கடினமாகி விடலாம் அதனால் வரும் முன் காப்போம்.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

சனி, நவம்பர் 26, 2011

பாஸ்போட் மோகத்தை கை கழுவுங்கள்



فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِن فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَّعَلَّكُمْ تُفْلِحُونَ

தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள். 62:10



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்னும் ஓரிரு மாதங்களில் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் என்ஜினியரிங் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வினியோகிக்கத் தொடங்கி விடுவார்கள். மற்ற வேலைகளில் மும்முரமாக ஈடுபடும் பிஸியில் பிள்ளைகளின் படிப்பின் மீது கவனம் செலுத்தாமல் விட்டு விடாதீர்கள்.
புறப்படுங்கள் வறுமையை துடைத்தெறிவதற்கு
இன்று உலகம் முழுவதும் கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய சமுதாயமாக நாம் இருக்கின்றோம் படித்து விட்டு கை நிறைய சம்பாதிக்க முடியாதக் காரணத்தினால் சில நேரங்களில் விரக்தி அடைந்து தவறான வழியில் பெருளீட்டும் மோசமான நிலைக்கும் தள்ளப்படுகின்றோம் இன்றும் தமிழகத்தில் இறைவன் தடைசெய்த வட்டித் தொழிலில் கொடிகட்டிப் பறக்கும் பிரபல முஸ்லீம் ஊர்கள் இருக்கவேச் செய்கின்றன. முறையாகப் படித்து கைநிறைய ஊதியம் பெற்றால் தவறான வழியில் பொருளீட்டும் அவசியம் வரவே வராது. ஒருவர் தமக்குரிய உரிமைகளைத் தேடும்போது அதை முறையாகத் தேடட்டும் என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறி இக்கின்றார்கள். (புகாரி 2076 )

இயற்கை வளம் கொழிக்கும் இந்தியாவில் பிறந்து வளர்ந்த நாம் முறையாக பொருளீட்ட வேண்டும் என்றால் இரண்டே வழிகள் தான் இருக்கின்றன ஒன்று படித்து விட்டு இந்திய அரசு அதிகாரிகளாக ஊழியம் செய்து கைநிறைய ஊதியம் பெற வேண்டும், அதற்கடுத்து தொழில் துறைகளில் முன்னேற வேண்டும் இவை இரண்டுக்குமே படிப்பு இன்றியமையாததாகும்.

பாஸ்போட் மோகத்தை கை கழுவுங்கள்
கடந்த காலங்களில் 10, அல்லது 11, 12 வரைப் படித்து விட்டு அயல்நாடு சென்று பிழைப்பு தேடுவதற்காக பாஸ்போர்ட் அப்ளை செய்தோம் இனிவரும் காலங்களில் அதை கை கழுவி விடுவோம். காரணம் இன்று நாம் கடுமையாகப் போராடி அரசாங்கத்திடமிருந்து குறைந்த பட்ச இடஒதுக்கீட்டை அடைந்திருக்கின்றோம் இன்னும் தொடர்ந்து முயற்சி செய்து விகிதாச்சார அடிப்படையில் முறையான இடஒதுக்கீட்டை அடைந்து கொள்வதற்கான முயற்சியில் இறங்கி இருக்கின்றோம் இன்ஷா அல்லாஹ் அதையும் அடைந்து கொள்வதற்காக வல்ல இறைவனிடம் பிரார்த்தனையில் ஈடுபடுவோம் இறைவன் நிறைவேற்றித் தருவான்.
மேற்காணும் இடஒதுக்கீட்டில் அரசு அதிகாரிகளாக நியமனம் செய்யப்படுவதற்கு அதற்கானப் படிப்பும், சான்றிதழும் அவசியம் தேவை என்பதை நாமறிந்து வைத்திருக்கின்றோம் அதனால் மேற்காணும் அண்ணா பால்கலைக்கழக விண்ணப்பப் படிவங்களைப் பெற்று உயர் கல்விப் பயிலுவதற்கு முயற்சி செய்யுங்கள்.
பிள்ளைகள் அதிகமான மார்க்குகள் எடுப்பதற்கு ஆர்வமூட்டுங்கள் படிப்பிற்கு தடையாக வீட்டில் இருக்கக் கூடிய பொழுது போக்கு அம்சங்களை தடுத்துக் கொள்ளுங்கள். ( நியூஸ், பயான் போன்ற நிகழ்ச்சிகளுக்காக குறிப்பிட்ட நேரத்தை மட்டும் ஒதுக்குங்கள் ) 

விரக்தி அடையாதீர்கள்
சிறு வயதில் சிலப் பிள்ளைகள் விளையாட்டில் கவனம் செலுத்துபவர்களாக இருப்பார்கள் படிப்பில் கவனம் செலுத்த மாட்டார்கள் அதை மட்டும் முன்மாதிரியாக எடுத்துக் கொண்டு இவன் மேல்படிப்பில் கோட்டை விட்டு விடுவான் இவனை நம்பி பெரிய தொகையை செலவிட முடியாது என்று ஆரூடம் கூறி பிள்ளைகளுடைய எதிர் காலத்தை தொலைத்து விடாதீர்கள்.
சிலக் குழந்தைகள் சிறு வயதில் அவ்வாறு படிப்பில் கவனம் செலுத்தாமல் விளையாட்டில் கவனம் செலுத்தக் கூடியவர்களாக இருப்பவர்கள் கல்லூரிப் பருவத்தில் படிப்பில் கவனம் செலுத்தி சாதனைப் படைக்கக் கூடியவர்களாக மாறி விடுவார்கள் குழந்தைப் பருவத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு வாலிபப் பருவத்தை கணிக்காதீர்கள் நமது கணிப்பு எப்பொழுதுமே பிழையானது விதியின் அமைப்பே உறுதியானது.
ஏழ்மை தடை இல்லை
நாம் ஏழையாக இருக்கின்றோம் நம்முடையப் பிள்ளகளை அதிக செலவு செய்து படிக்க வைக்க இயலாது என்றெண்ணி விரக்தி அடைந்து மேல்படிப்புக்கான முயற்சியை கை விட்டு விடாதீர்கள்.
அதே போன்று நமது பெற்றொர் ஏழையாக இருக்கின்றனர் அதனால் நாம் விரும்புகின்ற துறையில் படித்து முன்னேற முடியாது என்றெண்ணி மானவர்கர்கள் விரக்தி அடைந்து விடாதீர்கள்.
நாம் விரும்புகின்ற துறையில் படித்து முன்னேற முடியும் என்ற வேட்கை ஒவ்வொரு மானவனுக்கும் வரவேண்டும் அவ்வாறு வந்து விட்டாலேப் போதும் அதற்கு பெருளாதாரம் ஒரு தடையாக இருக்க முடியாது என்பதற்கு சமீபத்தில் ஏழை தாய் தகப்பனுக்குப் பிறந்து ஐ.ஏ.எஸ் ஸில் தேர்வு எழுதி வென்ற வீரபாண்டியன் அவர்களின் விடா முயற்சி ஒருப் பெரிய எடுத்துக் காட்டாகும். நல்வழியில் முன்னேற வேண்டும் என்று நினைத்த எவரும் சருக்கியதாக வரலாறேக் கிடையாது. 
மார்க்க அறிவுக்கும் தடை இல்லை
எஞ்சினியரிங், மருத்துவம் போன்ற தொழில்நுட்ப கல்வி பயிலுவதற்காக முழு நேரத்தையும் செலவிடுவதால் மார்க்க கல்விப் பயில முடியாத நிலை எற்படுமே என்றெண்ணி அஞ்ச வேண்டாம் எந்த நிலையிலும் அதனால் பின்னடைவு ஏற்படாது.
எஞ்சினியரிங், மருத்துவம் போன்ற தொழில் நுட்ப கல்வி கற்பதற்காக முழு நேரத்தை செலவிட்டாலும் தொழச் செல்வதற்கு எந்த கல்லூரியிலும் தடை கிடையாது, அவ்வாறு தடைவிதிக்கப் பட்டாலும் கிளாஸ் நடக்கும் வரை தான் தடுக்க முடியும், கிளாஸ் முடிந்தப் பிறகு அதற்கு முன் லஞ்ச் டயம் போன்ற இடைவேளையின் போது முஸ்லீம் மானவர்கள் இணைந்து ஜமாத்தாக தொழுது கொள்ள முடியும், விடுமுறை நாட்களில் மார்க்க அறிவை தேடிக் கொள்ள முடியும் மனமிருந்தால் மார்க்கம் உண்டு.
''அன்றைய மக்கள் கொடுக்கல், வாங்கலும் வியாபாரமும் செய்து வந்தார்கள். ஆயினும், இறைவனுக்குச் செய்ய வேண்டிய ஒரு கடமை அவர்கள் முன்னே வரும்போது அதை நிறைவேற்றி முடிக்கும் வரை அவர்களின் வியாபாரமோ, கொடுக்கல் வாங்கலோ அவர்களை திசை திருப்பவில்லை!'' என்று கதாதா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள். (புகாரி 2059 )


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

திங்கள், அக்டோபர் 17, 2011

தடைகளை உடைத்து சிகரத்தைத் தொடுவோம்






அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

போர் தந்திரம் வகுத்து எதிரிகளை விரட்டியடித்து வெற்றிவாகை சூடுவதில் ரோமானியப் பேரரசை வீழ்த்தி இந்தியாவை ஆக்ரமித்த பரங்கியர்களை விரட்டி அடித்ததுவரை உலக வரலாற்றில் முஸ்லீம்கள் அன்று தனித்து விளங்கினர்.

இந்திய மண்ணை ஓர் இந்தியனைத் தவிர வோறொருவன் ஆளத் தகுதியற்றவன் என்று நினைத்த மண்ணின் மைந்தர்களாகிய முஸ்லிம்கள் அண்ணியர்களை விரட்டியடிப்பதில் அதிகம் கவனம் செலுத்தினர்.

அவ்வாறு அன்னியர்களை விரட்டியடிப்பதில் அதிக கவனம் செலுத்தியவர்களால் பாரதம் முழுவதிலும் பரந்து கிடந்த தங்களின் பெரும்பான்மை சந்ததியினரின் எதிர்காலத்தைப் பற்றி அறவே சிந்திக்கத் தவறி விட்டனர். 

ஆனால் ஓர் இனம் மட்டும் தங்களுடைய சந்ததியனருடைய எதிர்காலம் பற்றி ஆழ்ந்து சிந்தித்தது நாமே வந்தேறிகளாக இருப்பதால் இந்த பூமியை  ராமன் ஆண்டால் என்ன ? ராவணன் ஆண்டால் என்ன ?
ஆட்சி அரியணையின் ஓரத்தில் நமக்கோர் இடம் வேண்டும் !
நமக்குப் பின் நமது சந்ததியினருக்கு முழு ஆட்சி பீடமும் வேண்டும் என்று சிந்தித்தது.

ஒரு புறம் உச்சி வெயிலில் சுதந்திரப் போர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கும் போதே கொள்ளைப் புறத்தில் நள்ளிரவில் வெள்ளையர்களுக்கு காட்டிக் கொடுக்கும் கள்ள அமர்வில் அந்த கயமைக் கும்பல் அமர்ந்து சதி ஆலோசனையில் ஈடுபட்டது.


சுதந்திரப் போராட்ட முஸ்லீம் வீரர்களுடைய முகாம்களையும்> பதுங்குக் குழிகளையும் ஆக்ரமிப்பாளர்களுக்கு காட்டிக்கொடுத்து அவர்களுடைய சிம்மாசனத்தை தாங்கிப் பிடிக்கும் தூத்துத் தூக்கிகளாக மாறி அன்றே அவர்களின் அரியனையின் ஓரத்தில் ஒட்டிக்கொண்டார்கள். 

அதனால் இன்று சுதந்திர இந்தியாவின் முழு அரியணையையும் காட்டிக் கொடுத்தவர்களுடைய வாரிசுகள் கைப்பற்றிக் கொண்டனர்.   

உயிரைப் பணயம் வைத்துப்போராடி தாய் மண்ணிலிருந்து ஆக்ரமிப்பாளர்களை விரட்டியடித்த சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகள் சொந்த நாட்டின் ப்ளாட்பாரங்களில் பெட்டிக்கடை வியாபாரிகளானார்கள் !

இந்த நேரத்தில் இதை ஏன் நாம் நிணைவுப் படுத்துகின்றோம் ?

இது ஆகஸ்ட் 15ம் அல்ல !
ஜனவரி 26ம் அல்ல !

ஆனால் மார்ச் 2ம் தேதி முதல் எஸ்.எஸ்.எல்.சி> ப்ளஸ் 2 க்கான முழு ஆண்டு பரீட்சை தொடங்கவிருப்பதால் தொழில் நுட்ப கல்வி கற்பதற்காக விழிப்புணர்வூட்டுகிறோம்.

கடந்த கால முஸ்லீம் சமுதாயத்துடைய உச்ச கட்டப் படிப்பு என்பது எஸ்.எஸ்.எல்.சி வரை>  அல்லது ப்ளஸ் 2 வரை தான் அதற்கு மேல் போக மாட்டார்கள்.

இனிவரும் காலங்களில் அதற்கு மேலும் படிப்பைத் தொடர வேண்டும் படிப்பின் சிகரத்தை எட்ட வேண்டும் பின் வாங்கக் கூடாது என்பதற்காக இந்நேரத்தில் இதை நாம்  நிணைவுப் படுத்துகிறோம்.

நாம் பிறந்த மண்ணிலேயே மற்ற சமுதாயத்தினர் அரசுத் துறைகளில் வேலை செய்து கைநிறையப் பொருளீட்டி தனது குடும்பத்தினருடன் நிம்தியாக வாழ்வது போல் நாமும் நம்முடைய வாழ்வை அவர்களைப் போல் சுதந்திரமாக அமைத்துக் கொள்வதற்காக கல்வி கற்று அரசாங்க உத்தியோகத்தில் இடம் பிடிப்பதற்காக எத்தனையோ முறை அறவழிப் போராட்டங்கள் செய்துப் பார்த்தும் அனைத்தும் விழலுக்கிறைத்த நீராகி விட்டது. கைக்கெட்டியது வாய்க்கெட்டாத நிலையில் உள்ளது.

ஆள்வோருடைய செவிப்பறைகளைத் தட்டுவதைப்போல் அதை விட இன்னும் செவிலில் அறைந்தாற் போல் சச்சார் கமிட்டி தனது அறிக்கையை முஸ்லீம்கள் கல்வி அறிவிலும்> அரசாங்க உத்யோகத்திலும் மிகவும் பின் தங்கி இருக்கிறார்கள் என்று உரக்கக் கூறியும் அது அரசுக்கு செவிடன் காதில் ஊதிய சங்காகி விட்டது.

இந்தியாவில் பிறந்து வளர்ந்த முஸ்லீம்களாகிய நாம் அயல்நாட்டில் பிழைப்புத் தேடித் திறியும் சமுதாயமாகி விட்டோம். நம்முடைய நிலமை இது தான் என்று தெள்ளத் தெளிவாக ஆனப்பிறகு அதிலாவது முறையாக ஏன் கால் ஊண்டக் கூடாது ?

படிப்பறிவில்லாமலும்> கைத்தொழில் கற்காமலும் அயல்நாட்டிற்கு பிழைப்புத் தேடிச் செல்லும் நம் சமுதயாத்தின் நிலை என்னத் தெரியுமா ? 
  • ஆடு> மாடுகளை மேய்ப்பவர்களாகவும்>
  • விவசாயிகளாகவும்>
  • ரோடு போடுகின்றவர்களாகவும்>
  • ரோடு கூட்டுகின்றவர்களாவும்>
  • கார் கழுவுகின்றவர்களாகவும்>
  • கட்டடம் கட்டுவதற்காக கற்களை சுமப்பவர்களாகவும்>
  • சந்தைகளில்> மார்கெட்களில் லோடிங்> அன் லோடிங் செய்பவர்களாகவும்.

கால் நூற்றாண்டுகளைக் கடந்து அரை நூற்றாண்டுகளுக்கு மத்தியில் இளமையைத் தொழைத்து முதுமையை ஈன்று தாயகம் திரும்புகினற்னர் 
இதில் இன்னும் கொடுமை என்னத் தெரியுமா ?

இத்தனை ஆண்டுகள் கடந்து தாயகம் திரும்பும் பலருக்கு சொந்த வீடு இருக்காது.

வருடங்கள் ஓடிக்கொண்டே இருக்கும் இளமை தேய்ந்து கொண்டே செல்லும் கடமைகள் முடிவதில்லை.

இதெற்கெல்லாம் என்னக் காரணம் ?
படிக்காமல் அரபு நாடுகளுக்கு வேலைத் தேடி வந்து மிகவும் குறைந்த சம்பளத்தில் லேபர் வேலையில் சேருவதால் லடசக் கணக்கில் செலவு செய்து வந்தக் கடனையும் சீக்கிரத்தில் அடைக்க முடிவதில்லை> குடும்பத்திற்கான அடிப்படை கடமைகளையும் செய்து முடிக்க முடிவதில்லை. ஆனால் முருக்கேறிய வாலிபப் பருவம் சிறுது> சிறிதாக கரைந்து தொழைந்துப் போய் வீடுத் திரும்புகிறோம்.

அதில் பலர் தாயகம் திரும்பாமலேயே வந்த இடத்தில் ஆக்ஸிடென்டுகள் மூலமும்> ஹார்ட் அட்டாக் மூலமும் அகால மரணத்தைத் தழுவி விடுகின்றனர்.

தலைமாட்டில் நின்று அழுது நெற்றியில் முத்தமிட்டு எடுத்துச்சென்று புதைக்கக் கூட  நாதியில்லாமல் ஊரார் கூடி புதைக்கும் பரிதாபத்திலும் பரிதாப நிலை.

யாருக்காக பிறந்த மண்ணை விட்டு அண்ணிய மண்ணுக்கு பிழைப்பு தேடிவந்து மண்ணோடு மண்ணாகிப் மடிந்துப் போனாரோ அன்னாருடைய வாரிசுகளுக்காக 5 ரியால் 10 ரியால் வசூல் செய்து அனுப்பி வைக்கும் அடுத்த அவல நிலை.

அன்புள்ளம் கொண்ட தாய் - தந்தையரே !
கடன் வாங்குவதற்கும்> திருப்பிக் கொடுப்பதற்கும் இறைவன் அனுமதித்திருப்பதால் கடன் பெற்று உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்து பட்டதாரியாக> பொறியாளராக> ஆங்கிலப் புலமையுடன் வெளிநாட்டுக்கு அனுப்பி வைப்பதற்கு முயற்சி செய்யுங்கள்.

அவ்வாறு செய்தால் கைநிறைய சம்பதாதித்து வெகு சீக்கிரத்தில் கடனை அடைத்துவிட்டு தனது குடும்பத்திற்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதுடன் தனது மனைவி பிள்ளகைளை வரவழைத்துக் கொண்டு நிம்மதியாக வாழ்க்கையைத; தொடர முடியும்.  

தவறினால்...
இந்தியாவில் முன்னேறிய சமுதாயத்தவர்கள் அரசு வேலைகளை மட்டும் நம்பாமல் இந்தியா> மற்றும் வெளிநாடுகளில் உதவும் விதமாக சாஃப்ட்வேர் இஞ்சினியராக> சிவில் இஞ்சினியராக> மெக்கானிக்கல் இஞ்சினியராக இன்னும் பிரபல தொழில் நுட்ப கல்விகயைப படித்து விட்டு வெளி நாடுகளில் வந்து நம்மை விட முன்னேறுகிறார்கள்.


ஆயிரம் முஸ்லீம் லேபர்களை வைத்து இயங்கக் கூடிய பிரபலக் கம்பெனிக்கு எம்.டி யாக ஒரு ஐயரையோ> கிருஸ்தவரையோ தேர்வு செய்து கொண்டு வருகின்றனர் அவரும் கம்பெனியை பிரமாதமாக நடத்துகிறார் அதற்குக்காரணம் அதற்கு தேவையானப் படிப்பு அவரிடம் இருப்பதுவேயாகும். 


அதே கம்பெனியில் சேல்ஸ் ரெப்ரஸென்டிவ்களாகவும்> சூப்பர்வைஸர்களாகவும்> அவர்களே இருப்பார்கள் அதற்கும் காரணம் அதற்கு தகுந்தப் படிப்பு அவர்களிடம் இருப்பதுவேயாகும்.


படிக்காமல் வெளிநாடு வரும் முஸ்லிம் லேபருடைய சம்பளம் 300 ரியாலாக இருந்தால் படித்து விட்டு வெளிநாடு வரும் அவர்களுடைய சம்பளம் மூவாயிரம் ரியாலாக இருக்கும்.

படிக்காமல் வெளிநாடு வந்து 300 ரியால் சம்பளம் பெருகின்ற உங்கள் பிள்ளைகள் 3 வருடமானாலும் தாய் நாட்டுக்குத் திரும்பி தனது மனைவி பிள்ளைகளை பார்க்க வர முடியாத அளவுக்;கு பண நெருக்கடி சம்பளம் பற்றாக்குறையினால் ஏற்படும்.

படித்து விட்டு வெளிநாட்டுக்கு வருகின்றவர்களுக்கோ வந்த மூன்று மாதங்களில் கடனையும் அடைத்து விட்டு மனைவிப் பிள்ளைகளை வரவழைத்துக்கொண்டு நிம்மதியாக வாழ்க்கையைத் தொடங்குகின்றனர்.

தடைகளை உடைத்து சிகரத்தைத் தொடுவோம்.
மார்ச் 2ல் முழாண்டு தேர்வு தொடங்கவிருப்பதால் இப்பொழுதே உங்கள் மகனுக்கு எந்த காலேஜில்  என்னப் படிப்பு ? என்ற விபரங்களை சேகரிக்கத் தொடங்குங்கள்.

காலச் சூல்நிலையில் மாற்றம் ஏற்படும் போது இந்திய ஆட்சியாளர்களுடைய உள்ளத்தை இறைவன் புரட்டி விட்டால் பிறந்த நாட்டில் உயர் பதவிகளில் அமருவதற்கும் அந்தப் படிப்பு உதவிடும்> இல்லை என்றாலும் அயல்நாட்டில் கைநிறைய பொருளீட்டுவதற்கு உதவிடும். படிப்பு வீண் போகாது.

படிக்காமல் வேலைத் தேடி வெளிநாடு வருவோருடைய அவல நிலையும்>
படித்துவிட்டு வேலைத் தேடி வெளிநாடு வருவோருடைய செல்வ நிலையையும் விளக்கும்  வளைகுடா வாழ் சகோதரர்களின் அவலநிலைகள் எனும் இரண்டு பாகங்களைக் கொண்ட வீடியோவைக் காணத் தவறாதீர்கள்.





وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும் அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன். 3:104


அஸ்ஸலாமுஅலைக்கும் வரஹ்.... அழைப்புப் பணியில் அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்